சர்வதேச ரோட்டரி கழகத்தின் போலியோ விழிப்புணர்வு பேரணி

MOHAMED NAZAR - COLOMBO CORRESPONDENT

UPDATED: Oct 18, 2024, 10:07:45 AM

சர்வதேச போலியோ தினத்தை முன்னிட்டு இலங்கையின் 5

ரோட்டரி கழகங்கள் இணைந்து மாபெரும் விழிப்புணர்வு

பேரணியொன்றை  நடத்தியிருந்தன.

original/whatsapp-image-2024-10-18-at-13

கொழும்பு , வத்தளை , ஜாஎல, கந்தானை , பமுனுகம,

நீர்கொழும்பு புதிய தலை முறை ஆகிய 5 ரோட்டரி கழகங்கள்

இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான

வாகனங்கள் வத்தளையிலிருந்து பேரணியாக நீர்கொழும்புவரை

சென்றதுடன் போலியோ ஒழிப்புத்திட்டத்துக்கான நிதித்திரட்டும்

வகையில் பல்வேறு நிகழ்வுகளும் ஒழுங்குப்படுத்தப்பட்டிருந்தன.

போலியோ ஒழிப்பு வேலைத் திட்டத்துக்கு உலக சுகாதார

மையத்துக்கு நிதியுதவி வழங்கும் முகமாகவும் இலங்கையில்

அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும்

ஒழுங்கு செய்யப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்வுக்கு சர்வதேச

ரோட்டரி கழகம் அனுசரணை வழங்கியிருந்தமை

குறிப்பி


டத்தக்கது.

VIDEOS

Recommended