தர்மபுரியில் மழைக்கு ஒழுகிய அரசு பேருந்தில் குடை பிடித்தவாறு பயணித்த மாணவர்கள்.

சசிகுமார்

UPDATED: Oct 17, 2024, 7:35:35 AM

தர்மபுரி மாவட்டம்

பாலக்கோட்டிலிருந்து காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி கிராமத்திற்கு 6 ஆம் நெம்பர் டவுன் பஸ் ஒன்று புறப்பட்டது. 

இதில் பள்ளி கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பலர் பயணம் செய்த நிலையில் கனமழையால் பேருந்து முழுவதும் ஜல்லடை போல் தண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.

அப்போது மழைக்காலம் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் குடை பேருந்து பயணிகள் குடை பிடித்தவாறு பேருந்தில் பயணம் செய்தனர்.

அரசு பேருந்து

இதில் குடை இல்லாதவர்களின் நிலை மழையில் நனைந்தபடியே, பேருந்து இருக்கைகளில் அமராமல் நின்று கொண்டு பயணித்தனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குறிப்பாக அரசு புறநகர் பேருந்துகளில் மிகவும் பழுதடைந்த பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்து கழகம் சரியான முறையில் நடவடிக்கை மேற்கொண்டு பயணிகளின் நலன் கருதி பழுதடைந்துள்ள பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை விடுமாறு பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

 

VIDEOS

Recommended