• முகப்பு
  • குற்றம்
  • மோகன் பட்டேல் என்பவரது வீட்டில் ஆப்ரேஷன் அகழி என்ற பெயரில் போலீசார் அதிரடி சோதனை.

மோகன் பட்டேல் என்பவரது வீட்டில் ஆப்ரேஷன் அகழி என்ற பெயரில் போலீசார் அதிரடி சோதனை.

JK

UPDATED: Oct 18, 2024, 10:39:14 AM

திருச்சி மாவட்டம்

அரியமங்கலத்தில் மோகன் பட்டேல் என்பவரது வீட்டில் நில மோசடி தொடர்பாக 10மணி நேரம் சோதனைக்கு பிறகு கைப்பற்றப்பட்ட ஆவணங்களை போலீசார் பாதுகாப்புடன் எடுத்துச் சென்றனர்.

ஆளுங்கட்சியின் அழுத்தத்தின் காரணமாக சோதனை நடைபெறுவதாக மோகன் பட்டேலின் மகள் பூர்ணிமா பட்டேல் குற்றச்சாட்டு.

திருச்சி எஸ்பி வருண்குமாருக்கு பொதுமக்களிடமிருந்து போலி ஆவணம் தயாரித்து நிலங்களை அபகரித்து உள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஆப்ரேஷன் அகழி என்ற பெயரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

நில மோசடி

இதன் ஒரு பகுதியாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு வந்த தகவலின் அடிப்படையில் நில மோசடி தொடர்பாக  திருச்சி அரியமங்கலம் பால்பண்ணை லட்சுமிபுரம் 2வது தெருவை சேர்ந்த மோகன் பட்டேல் என்பவரது வீட்டில் கடந்த ஞாயிற்றுகிழமை திருச்சி மாநகர போலீசார் சோதனை மேற்கொள்ள வந்தனர். அப்போது வீட்டில் உள்ளவர்கள் போலீசார் அனுமதிக்கவில்லை. 

இரவு நேரம் என்பதால் போலீசார் உள்ளே செல்லாமல் மீண்டும் காலையில் சோதனை மேற்கொள்ள திட்டமிட்டனர். இதனை தொடர்ந்து அன்றைய தினம் இரவு முழுவதும் வீட்டை சுற்றி போலீசார் காவல் பணிக்கு அமர்த்தப்பட்டனர். இந்த நிலையில் மறுநாள் 12மணி நேரம் காத்திருந்தும் திறக்கப்படாததால் அன்றும் காத்திருந்தனர்.

பின்னர் போலீசார் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி பழனி தலைமையிலான போலீசார் நீதிமன்ற ஆணை பெற்று மோகன் பட்டேல் வீட்டில் சோதனை நடத்த வந்தனர்.

ஆப்ரேஷன் அகழி 

அப்போது வீட்டின் வெளி கேட் பூட்டப்பட்டிருந்தது. வீட்டினுள் இருந்த நபர்கள் கதவைத் தட்டி நீண்ட நேரம் ஆகி திறக்காததால் கிராம நிர்வாக அலுவலர் பாலாம்பிகா முன்னிலையில் போலீசார் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து சோதனை நடத்தினர்.

மதியம் இரண்டு முப்பது மணிக்கு ஆரம்பித்த சோதனை தொடர்ந்து 10மணி நேரமாக நடைபெற்றது. மேலும் மோகன் பட்டேலின் வீட்டில் உள்ள அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை போலீசார் கணக்கெடுத்து பதிவு செய்து அவரது மகள் பூர்ணிமா பட்டேலிடம் கையெழுத்திடுமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர்.

அதற்கு அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும் கைப்பற்றப்பட்ட இரும்பு பிரோ, ஆவணங்களை போலீசார் பாதுகாப்புடன் எடுத்துச் சென்றனர். இரும்பு பீரோவிற்கு குடும்பத்தினர் சாவி தராததால் அவை சீட்டு கிரேன் உதவியுடன் போலீசார் வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்றனர்.

Latest Crime News Today In Tamil 

தொடர்ந்து சோதனைகள் முழுமை பெறாத நிலையில் அடுத்த கட்டமாக மீண்டும் சோதனை நடைபெறும் என போலீசார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மோகன் பட்டியலின் மகள் பூர்ணிமா பட்டேல் கூறியதாவது :

நீதிமன்ற ஆணையுடன் வந்த போலீசாரிடம் நீதிமன்ற ஆணையை காண்பிக்குமாறு கேட்டோம், தொடர்ந்து எங்களது வழக்கறிஞர் வரும் வரை சற்று நேரம் காத்திருக்க சொன்னோம், ஆனால் போலீசார் உடனடியாக வீட்டின் பூட்டை உடைத்து அத்துமீறி உள்ளே நுழைந்தனர்.

மேலும் எங்களை மிரட்டி ஆவணங்களை கைப்பற்றினார். அதேபோல் நீதிமன்ற ஆணையின் படி உள்ள ஆவணங்களை மட்டுமல்லாது, மற்ற ஆவணங்களையும் சேர்த்து போலீசார் கைப்பற்றினர்.

Breaking News Today In Tamil 

ஆவணங்களை எடுத்துச் சென்ற போது என்னென்ன ஆவணங்கள் எடுத்துச் சென்றோம் என்பது குறித்த தகவலை அளிக்காமல் போலீசார் எடுத்துச் சென்றதாகவும்,

அதேபோல் இந்த சோதனையானது ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவரின் அழுத்தத்தின் பேரில் நடைபெற்று வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மோகன் பட்டேல் என்பவருக்கு திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நில மோசடி தொடர்பான வழக்குகள் உள்ளது மட்டுமின்றி திருச்சி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களிளும் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

 

VIDEOS

Recommended