• முகப்பு
  • விவசாயம்
  • காவிரி ஆற்றில் உடனடியாக தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி ஒப்பாரி வைத்த விவசாயிகள் கைது.

காவிரி ஆற்றில் உடனடியாக தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி ஒப்பாரி வைத்த விவசாயிகள் கைது.

JK

UPDATED: Jul 15, 2024, 2:33:22 PM

காவேரி ஆறு

காவிரி ஆற்றில் உடனடியாக தண்ணீர் திறந்து விட வலியுறுத்தியும், உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி திருச்சி தில்லைநகரில் உள்ள கர்நாடகா வங்கி முன்பு, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.

Latest Trichy District News

காவிரி தண்ணீர் இன்றி விவசாயிகள் சாகின்றனர் என்பதை உணர்த்தும் விதமாக, வங்கி முன்பு விவசாயிகளை பிணம் போல படுக்க வைத்து, அவர்களை சுற்றி பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News

தொடர்ந்து காவல்துறையினர் அய்யாக்கண்ணு உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

வாரத்தின் துவக்க நாளான இன்று வங்கி முன்பு விவசாயிகள் நடத்திய போராட்டத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

 

VIDEOS

Recommended