டெல்லியில் உச்சநீதிமன்றம் முன்பு விவசாயிகள் போராட்டம்.

JK

UPDATED: Jul 27, 2024, 8:12:41 AM

Latest Agriculture News In Tamil

விவசாய விளை பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபகரமான விலை தருவதாக கூறிவிட்டு தராமல் ஏமாற்றியதை நிறைவேற்ற கோரியும், விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், 

கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.5000/- வழங்க வலியுறுத்தியும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் கர்நாடக அரசு மாதாமாதம் தண்ணீர் திறக்க உடனடியாக மத்திய அரசு உத்தரவிட கோரியும், 

டெல்லியில் உச்ச நீதிமன்றம் முன்பு போராட்டம் 

மேகத்தாதுவில் அணை கட்ட கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தலைநகர் டெல்லியில் உச்ச நீதிமன்றம் முன்பு போராட்டம் நடத்துவதற்காக திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் இருந்து இன்று வைகை எக்ஸ்பிரேஸ் மூலமாக சென்னை சென்றனர்.

Tamil Nadu Farmer News

அவர்கள் மாலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து GT எக்ஸ்பிரேஸ் மூலமாக டெல்லி செல்கின்றனர்.

பேட்டி : அய்யாக்கண்ணு, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கம் மாநில தலைவர்.

 

VIDEOS

Recommended