• முகப்பு
  • விவசாயம்
  • தேனி மாவட்டம் வீரபாண்டி சுற்று வட்டார பகுதிகளில் பருத்தி விளைச்சல் விலையில்லாமல் விவசாயிகள் கவலை.

தேனி மாவட்டம் வீரபாண்டி சுற்று வட்டார பகுதிகளில் பருத்தி விளைச்சல் விலையில்லாமல் விவசாயிகள் கவலை.

ராஜா

UPDATED: Apr 29, 2024, 1:53:51 PM

தேனி மாவட்டம் வீரபாண்டி அதனை சுற்றியுள்ள பகுதிகளில்விவசாயிகள் பருத்தி சாகுபடி அதிக அளவில் பயரிடப்பட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு விலை குறைவால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்.

தற்போது கோடை வெயில் தாக்கும் அதிகமாக இருப்பதால் பருத்தி விளைச்சலும் குறைந்த அளவில் இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கூலி ஆட்களுக்குசம்பளம் கொடுத்து பின்னர் பருத்தி செடிகளுக்கு உரம் மருந்து உள்ளிட்ட ஏராளமான செலவுகள் செய்து காத்து வந்த நிலையிலும் தற்போது உரிய விலை கிடைக்காமல் இருப்பதால் மிகுந்த ஏமாற்றத்துடன் நஷ்டம் அடைந்து வருகிறோம்.

இப்பகுதியில் பருத்தி விளைச்சலை பெருக்குவதற்கு எங்களைப் போன்ற பருத்தி விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் தமிழக அரசு எங்கள் மீது கவனம் செலுத்தினால் எங்களது விவசாயம் செழிக்கும் என்று தெரிவிக்கிறார்.

 

VIDEOS

Recommended