• முகப்பு
  • கல்வி
  • யாழ் மாவட்ட அஹதிய்யா பாடசாலை மாணவர்களுக்கான கருத்தரங்கு

யாழ் மாவட்ட அஹதிய்யா பாடசாலை மாணவர்களுக்கான கருத்தரங்கு

ஏ.எஸ்.எம்.ஜாவித்

UPDATED: Oct 1, 2024, 8:15:00 AM

யாழ் மாவட்ட அஹதிய்யா பாடசாலை மாணவர்களுக்கான கருத்தரங்கு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ம பிரதீபன் தலைமையில் அரசாங்க அதிபர் பணிமனையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் வக்பு பிரிவு பொறுப்பாளர் ஏ.எஸ்.எம்.ஜாவித் , விடயத்திற்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ரி.எம்.இல்ஹாம், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர்.ஏ.ஹபீழ், முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் யாழ் மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.நிஸ்தாக் , திணைக்களத்தின் அலுவலர் றில்வான், இக்ரா அஹதிய்யா பாடசாலை அதிபர் மெளலவி சுபியான், யாழ் முஹைதீன் பெரிய பள்ளிவாசலின் பள்ளி வாசல் தலைவர் ஜலீல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மாணவர்களின் கற்றல் தொடர்பாக ஏ.ஆர்.ஏ.ஹபீழ் அவர்களும் போதைப் பொருள் பாவனைகளின் விபரீதங்கள் தொடர்பாக யாழ் மாவட்ட நீதிவான் நீதிமன்ற வளாகத்தின் சமுதாய சீர் திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ப. தர்மினி ஆகிய இருவரும் வழங்கினர்.

 

VIDEOS

Recommended