• முகப்பு
  • கல்வி
  • பட்டதாரி ஆசிரியர்களுக்கான கற்றல் மற்றும் கற்பித்தல் பற்றிய ஒரு நாள் கருத்தரங்கும்,கெளரவிப்பும்

பட்டதாரி ஆசிரியர்களுக்கான கற்றல் மற்றும் கற்பித்தல் பற்றிய ஒரு நாள் கருத்தரங்கும்,கெளரவிப்பும்

அஷ்ரப் ஏ சமத்

UPDATED: Jul 16, 2024, 1:14:06 AM

மேல் மாகாண புத்திஜீவிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மேல் மாகாண பாடசாலைகளுக்கு 2024 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கான கற்றல் மற்றும் கற்பித்தல் பற்றிய ஒரு நாள் கருத்தரங்கும், ஆசிரியர்களை கெளரவிக்கும் நிகழ்வும் கொழும்பு-10, அல் ஹிதாயா கல்லூரியில் நடைபெற்றது.

மேல் மாகாண புத்திஜீவிகள் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் முன்னாள் பரீட்சை ஆணையாளர் ஏ.எஸ்.மொஹமட் தலைமையில் இந்த நிகழ்வு நடந்தது. இந்நிகழ்வில் மேல் மாகாண சபையினால் 2024 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட 138 பேர் கலந்து கொண்டனர்.

கற்றல் மற்றும் கற்பித்தல் தொடர்பான சிறப்பு தேர்ச்சி பெற்ற வளவாளர்கள் விரிவான விளக்கம் அளித்தனர். உயர்கல்விக்கான ஃபாத்தி நிறுவனத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி றவூப் ஷெய்ன் "21ஆம் நூற்றாண்டு ஆசிரியரின் வகிபாகம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்.

 மன்றத்தின் நிறைவேற்று உறுப்பினர் பேராசிரியர் டொக்டர் எம்.எஸ்.மொகமட் சிபா "தனி ஆற்றல்களை இனம் காணலும் குழுக் கட்டமைப்பை கட்டியெழுப்புவதும்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்.

முன்னாள் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.எம்.மொகமட் ஒரு ஆசிரியரின் அனுபவத்தைப் பற்றி உரையாற்றினார். தொழில் அதிபர் எம்.எச்.எம். மாகிர் ஆசிரியர்களைப் பற்றி உரையாற்றினார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் கொழும்பு மாநகர மேயரும் முன்னாள் ஐக்கிய அரபு எமிரேட்சின் இலங்கைக்கான தூதுவருமான அல் ஹாஜ் ஹுஸைன் முஹம்மத் கலந்து கொண்டு உரையாற்றினார் மற்றும் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். 

"தனிப்பட்ட திறன்கள் உறவுகள்" என்ற தலைப்பில் மன்றத்தின் நிறைவேற்று உறுப்பினர் டொக்டர் றிசாட் புஹாரி உரையாற்றினார். அதிதிகளும் சங்கத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்ட முக்கியஸ்தர்களும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.



 

VIDEOS

Recommended