• முகப்பு
  • கல்வி
  • பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் மாணவர் சங்கங்களுக்கு இடையில் கலந்துரையாடல்

பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் மாணவர் சங்கங்களுக்கு இடையில் கலந்துரையாடல்

இர்ஷாத் றஹ்மத்துல்லா

UPDATED: Oct 18, 2024, 2:34:25 AM

பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் மாணவர் சங்கங்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் மாணவர் நலன் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்நோக்கும் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

original/whatsapp-image-2024-10-17-at-18
நேற்று (17) பிற்பகல் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவை மற்றும் அதனுடன் இணைந்த பல்கலைக்கழக மாணவர் சங்கங்கள், கல்வி உரிமைக்கான மாணவர் சக்தி மற்றும் அதனுடன் இணைந்த பல்கலைக்கழக மாணவர் சங்கம் மற்றும் அனைத்து மருத்துவ பீட மாணவர் சங்கங்களும் கலந்து கொண்டன.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான துறவிகள் சங்கம், தேசிய உயர்தர டிப்ளோமா மாணவர் சங்கம், சாகர பல்கலைக்கழக பொது மாணவர் சங்கம், பொறியியல் மற்றும் தொழிநுட்ப மாணவர் சங்கம் உள்ளிட்ட பல மாணவர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொரட்டுவை பொறியியல் பீட மாணவர் ஒன்றியம் கலந்து கொண்டது.

original/whatsapp-image-2024-10-16-at-20

VIDEOS

Recommended