• முகப்பு
  • கல்வி
  • கல்வியால் சிறந்த சமூகத்தைக் கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளை நோக்காகக் கொண்டு சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணி

கல்வியால் சிறந்த சமூகத்தைக் கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளை நோக்காகக் கொண்டு சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணி

இர்ஷாத் றஹ்மத்துல்லா

UPDATED: Oct 14, 2024, 2:52:31 PM

கல்வியால் சிறந்த சமூகத்தைக் கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளை நோக்காகக் கொண்டு சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணி மற்றும் ஐ.என்.எஸ். ஒன்லைன் கல்லூரி இணைந்து நாடளாவிய ரீதியில் நடைபெற்ற சிறுவர் திரமைக்காண தேடல் கழம் போட்டியில் சுமார் 1000 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டி நிகழ்ச்சியில் முதற்கட்டமாக வெற்றி பெற்ற  80 சிறுவர்கள் கௌரவிக்கும் வகையில் பரிசளிப்பு மற்றும் சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்வு கண்டி Sampath மண்டபத்தில்  I N S ஒன்லைன் கல்லூரியின் நிர்வாக தலைவி Naja தலைமையில் இடம்பெற்றது.

 

இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக  international human rights global mission ஊடகப் பணிப்பாளர் ஊடகவியலாளர் ஏ.டபிள்யூ.எம்.பஸ்லான் கலந்து சிறப்பித்தார்.

 இதன் போது  மாணவர்களின் திறமைக்கு முதலிடம் வழங்கப்பட்டு அவர்களின் திறமை வெளிக்கொணரப்பட்டது. இந்நிகழ்வில் மாணவர்களது திறமைகளை வெளிக்கொண்டுவரும் வகையில் கழை நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 இறுதியாக  பிரதம அதிதியாக கலந்து கொண்ட சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் ஊடகப் பணிப்பாளர் ஊடகவியலாளர் பஸ்லான் அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

 

VIDEOS

Recommended