• முகப்பு
  • கல்வி
  • ஆஸ்திரேலியாவை முதன்மையாக கொண்ட வன்னி ஹோப் ஊடாக கணித பயிற்சி திறனை மேம்படுத்தும் கணித செயற்பாட்டு திறன் அறைகள்

ஆஸ்திரேலியாவை முதன்மையாக கொண்ட வன்னி ஹோப் ஊடாக கணித பயிற்சி திறனை மேம்படுத்தும் கணித செயற்பாட்டு திறன் அறைகள்

ராமு தனராஜா

UPDATED: Jul 28, 2024, 6:17:24 AM

ஆஸ்திரேலியாவை முதன்மையாக கொண்டு இயங்கும் வன்னி ஹோப் ஆஸ்திரேலியா நிறுவனத்தின் ஊடாக மலையகத்தின் பதுளை மாவட்டத்தில் பல்வேறு பாடசாலைகளில் ஆரம்ப பிரிவு மாணவர்களின் கணித பயிற்சி திறனை மேம்படுத்தும் நோக்கில் 07 கணித செயற்பாட்டு திறன் அறைகள் பாடசாலைக்கு இன்று முதல் எதிர் வரும் 31 திகதி வரை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குறித்த அமைப்பின் இணைப்பாளர் கிருஷ்ணசாமி காண்டீபன் தெரிவித்தார் 

இந் நிகழ்வுகளில் பிரதம அதிதிகளாக வன்னி ஹோப் ஆஸ்திரேலியா நிறுவனத்தின் தலைவர் ரஞ்சன் சிவஞானசுந்தரம், செயலாளர் டாக்டர். மாலதி வரன் மற்றும், இயக்குனர் . வல்லுவன் தில்லைராஜா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கணித துறையில் பெரிதும் பின் தங்கிய நிலையில் உள்ள மலையக மாணவர்கள் மீண்டெழ மேற்கொள்ளப்படுகின்ற மிகப்பெரிய ஒரு வேலைத்திட்டம் ஆகும்.

ஆகவே இதனை நாம் அணைவரும் வரவேற்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

VIDEOS

Recommended