• முகப்பு
  • கல்வி
  • மணப்பெண் அலங்காரத்தோடு டி என் பி சி குரூப் 4 தேர்வு எழுதிய மணப்பெண்.

மணப்பெண் அலங்காரத்தோடு டி என் பி சி குரூப் 4 தேர்வு எழுதிய மணப்பெண்.

லட்சுமி காந்த்

UPDATED: Jun 9, 2024, 7:25:38 PM

தமிழகம் முழுதும் இன்று டிஎன்பிசி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே சி ஐ டி யு பொறியியல் கல்லூரியில் ஆண்கள் பெண்கள் என 1,000பேர் டிஎன்பிசி குரூப் 4 தேர்வு எழுதினர்.

இதில் சுங்குவார்சத்திரம் கண்ணூர் பகுதியை சேர்ந்த சியாமளா மற்றும் கதிரேசன் இருவருக்கும் காலை சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. 

இந்த நிலையில் மணமகள் சியாமளா மணப்பெண் அலங்காரத்தோடு தேர்வு எழுத வந்திருந்தார்.

தேர்வு எழுதிவிட்டு மணப்பெண் அலங்காரத்தோடு சென்ற சியாமளா கண்டு தேர்வு எழுத வந்தவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Recommended