பாம்பன் கடலில் குளித்த வாலிபர் கதி என்ன ? 

கார்மேகம்

UPDATED: May 8, 2024, 8:34:40 AM

ராமேஸ்வரம் பாம்பன் தனுஷ்கோடி பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாகவே காணப்படுகிறது.

இதனிடையே பாம்பன் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலர் நேற்று குந்துகால் பகுதியில் உள்ள ஆழ்கடல் மீன்பிடி துறைமுகத்தை சுற்றி பார்க்க சென்றனர் அப்போது குந்துகால் கடல் பகுதியில் இறங்கி குளித்துள்ளனர்

அப்போது பாம்பன் பள்ளிவாசல் தெரு பகுதியைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவருடைய மகன் முஜாஹித் ( வயது 18  எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கிவிட்டார்

இதனால் அவருடன் சென்றிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் மண்டபம் கடலோர போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் யாசர் மவுலானா தலைமையில் கடலோர போலீசாரும் மீனவர்களும் இணைந்து கடலில் இறங்கி தேடினர் முஜாகித்தை தேடும் பணி தீவிரமாக நடந்தது

அவரது நிலைமை என்னவென்று தெரியவில்லை இதனால் அவருடைய குடும்பத்தினர் உறவினர்கள் மிகுந்த சோகம் அடைந்துள்ளனர். 

 

  • 1

VIDEOS

Recommended