• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • நாகை அருகே நாகூர் தர்கா குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் துருநாற்றத்தால் பொதுமக்கள் கடும் அவதி.

நாகை அருகே நாகூர் தர்கா குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் துருநாற்றத்தால் பொதுமக்கள் கடும் அவதி.

செ.சீனிவாசன் 

UPDATED: May 21, 2024, 9:14:33 AM

நாகை மாவட்டம் நாகூரில் இஸ்லாமியர்களின் முக்கிய வழிபாட்டு தளமாக தர்கா அமைந்துள்ளது இது புகழ்பெற்ற சுற்றுலா தளமாகவும் விளங்கி வருகிறது

இங்கு வெளிமாநிலம் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் நாகூர் தர்ஹா குளத்தில் இன்று காலை திடீரென ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

குளத்தின் நிறம் பச்சையாக மாறி நான்கு புறத்திலும் குவியல் குவியலாக மீன்கள் செத்து மிதந்தன. இதன் காரணமாக தர்ஹா குளம் மேற்கு, வடக்கு, தெற்கு, நூல்கடை தெரு, கலீபா சாஹிப் தெரு உள்ளிட்ட தெருக்கள் மட்டுமில்லாமல் 1 கிலோ மீட்டர் தூரம்வரை துருநாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இதனை அறிந்த நாகூர் தர்ஹா தலைமை அறங்காவலர் ஹுசைன்சாஹிப் தலைமையில் தர்ஹா நிர்வாகிகள் குளத்தில் உடனடியாக ஆய்வு செய்து 10 மீனவர்களை கொண்டு சிறிய படகுகளை வைத்து மீன்களை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோடை வெயிலின் தாக்கத்தால் அதிகமாக இருந்த நிலையில் திடீரென ஒரு வார காலமாக மழை பெய்து வருவதால் திடீர் காலநிலை மாற்றத்தின் காரணமாக  மீன்கள் இறந்ததாகவும், விரைவில் குளம் தூய்மை செய்யப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டுக்கு விடப்படும் எனவும் தர்ஹா அறங்காவலர் தெரிவித்துள்ளார்.

 

VIDEOS

Recommended