• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • 57 ஆண்டுகளுக்குப் பிறகு தான் படித்த பள்ளிக்கு சென்று பள்ளி மாற்றுச் சான்றிதழ் வாங்கிய மூதாட்டி.

57 ஆண்டுகளுக்குப் பிறகு தான் படித்த பள்ளிக்கு சென்று பள்ளி மாற்றுச் சான்றிதழ் வாங்கிய மூதாட்டி.

இளையராஜா

UPDATED: May 20, 2024, 6:49:16 PM

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1967 ஆம் ஆண்டு எட்டாம் வகுப்பு படித்து படிப்பை தொடர இயலாமல் இடையில் நின்ற விஜயலட்சுமி 71 என்ற மூதாட்டி சுமார் 57 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளி மாற்றுச் சான்றிதழ் வழங்க கோரி பள்ளி தலைமை ஆசிரியரிடம் மனு அளித்தார்

இதுகுறித்து பரிசீலித்த பள்ளி தலைமை ஆசிரியர் வெ. பழனி வேல் மிகுந்த சிரமத்திற்கு இடையே பள்ளி மாட்டுச் சான்றிதழை தேடி எடுத்து விஜயலட்சுமிக்கு வழங்கினார்.

இது பற்றி விஜயலட்சுமி கூறிய போது தான் படித்த பள்ளியின் மாற்றுச் சான்றிதழ் கிடைக்கப்பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் மேலும் இது தனக்கு கிடைத்த அரிய பொக்கிஷமாக பாதுகாப்பேன் என்றும் கூறினார்

பள்ளி மாற்றுச் சான்றிதழை பெற்ற விஜயலட்சுமி திரைப்பட இயக்குனரும் நடிகருமான இ.வி. கணேஷ் பாபுவின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த மாற்றுச் சான்றிதழை பெற இவரோடு கூடுதல் ஒத்துழைப்பு வழங்கியது கந்தர்வகோட்டை கவிஞர் காமாட்சி சுந்தரம் சுமார் 57 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளி மாற்று சான்றிதழ் வழங்கப்பட்டது ஒரு அபூர்வ நிகழ்வாக கருதுவதாகவும் விஜயலட்சுமி கூறினார்.

 

  • 1

VIDEOS

Recommended