திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.

ஜெயராமன்

UPDATED: May 18, 2024, 3:49:12 AM

திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கும் மேலாக கோடை கன மழை கொட்டி தீர்த்து வருகிறது

அதன் ஒரு பகுதியாக இன்று திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் நகர பகுதி மற்றும் குடவாசல் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மஞ்சக்குடி புதுக்குடி, சேங்காலிபுரம், காப்பணாமங்கலம் அரசவனங்காடு ஆகிய பகுதிகளில் கோடை கன மழை கொட்டி தீர்த்தது

ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கன மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

கோடை கன மழை காரணமாக பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினார்கள்.

அதே சமயத்தில் குடவாசல் சுற்று வட்டார பகுதியில் பெய்த கன மழை காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயரும் என பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

 

VIDEOS

Recommended