• முகப்பு
  • குற்றம்
  • முதல் கணவருக்கு பிறந்த மகளை பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இரண்டாவது கணவர்.

முதல் கணவருக்கு பிறந்த மகளை பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இரண்டாவது கணவர்.

JK

UPDATED: Aug 23, 2024, 6:58:50 PM

திருச்சி 

திருச்சி காட்டூரை சேர்ந்தவர் அசன் பீவி (36) இவருக்கு 15வயதில் பெண் குழந்தை உள்ளது. இவரது முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தொடர்ந்து ராஜா முகமதுவை 2வது திருமணம் செய்து கொண்டார். இவர் தனியார் பள்ளியில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வருகிறான்.

இந்த நிலையில் ராஜ் முஹம்மது அசன்பீவியின் மகளான 15வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளான். அதை தனது செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்து சிறுமியை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளான்.

போக்சோ சட்டம்

இதை தெரிந்த அசன்பீவி, இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வீடியோ ஆதாரத்துடன் புகார் கொடுத்துள்ளார். 

அதன் அடிப்படையில் திருவெறும்பூர் காவல்துறையினர் ராஜாமுகமது இது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து திருச்சி நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்டு பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

 

VIDEOS

Recommended