• முகப்பு
  • குற்றம்
  • இளம்பெண்ணை அரை நிர்வாண புகைப்படம் எடுத்து மிரட்டல் : சித்தப்பா மகன் கைது.

இளம்பெண்ணை அரை நிர்வாண புகைப்படம் எடுத்து மிரட்டல் : சித்தப்பா மகன் கைது.

சுந்தர்

UPDATED: Aug 7, 2024, 6:20:41 PM

சென்னை மதுரவாயல்

பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரிஸ்வான் (39). இவர் அதேபகுதியில் பால் சீலிங் செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். 19 வயதான இவரது மகள் பாத்திமா பானு (19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 9ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு, தனது தந்தையின் கடையில் வேலை செய்து வந்தார்.

இதே கடையில் முகமது ரிஸ்வானின் தம்பி மகனான ஆஷ் முகமது கடந்த 2 வருடமாக தங்கி பணிபுரிந்து வந்தார். இதற்கிடையே பாத்திமா பானுவை ஆஷ் முகமது அரை நிர்வாணமாக படம் எடுத்ததாக தெரிகிறது. அந்தப் புகைப்படத்தை காட்டி ரேஷ்மா தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். 

Chennai Latest Crime News

சில மாதங்களுக்கு முன்னர் மும்பை சென்ற ஆஷ் முகமது போன் செய்து பாத்திமாவைபாத்திமாவை மிரட்டியுள்ளார். அத்துடன் பணம் மற்றும் நகையை எடுத்துக்கொண்டு மும்பை வர வேண்டும் எனவும், அப்போதுதான் அரை நிர்வாண புகைப்படத்தை டெலிட் செய்வேன் என்றும் கூறியுள்ளார்.

அவரது பேச்சை நம்பி வீட்டிலிருந்த நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு கடந்த ஜூன் மாதம் 24ஆம் தேதி பாத்திமா மும்பை சென்றார். அவரை மயக்க மருந்து கொடுத்து கொடூரன் ஆஷ் முகமது பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

Pocso Act

இதற்கிடையே மகளை காணவில்லை என்பதால் பதறிப்போனப் பெற்றோர் விருகம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்க, போலீஸார் விசாரணையை தொடங்கினர்.

பின்னர் ஜூன் 28ஆம் தேதி காணமல் போன் பெண் மும்பை குர்கவ் ரயில் நிலையத்தில் இருப்பதாக தகவல் தெரியவர, அவரது பெற்றோர் அங்கு சென்று பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு வீடு அழைத்து வந்தனர்.

வீட்டில் இருந்த பெண் அடுத்த நாளே தற்கொலைக்கு முயற்சிக்க, அதிர்ந்துபோன பெற்றோர் தங்கள் மகளிடம் நடந்தது குறித்து விசாரித்தனர்.

தனக்கு நடந்த கொடுமைகளையும், சித்தப்பா மகன் ஆஷ் முகமது தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததையும் அப்பெண் பெற்றோரிடம் கூறினார். 

Latest Chennai District News

இதுதொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பூந்தமல்லி நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டபோது, பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனை செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார். 

குற்றச் செயலில் ஈடுபட்ட ஆஷ் முகமது தெலங்கானாவின் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

News

அதன்படி தெலுங்கானா விரிந்த மதுரவாயில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் காவலர் கண்ணன் உள்ளிட்ட தனிப்படையினர் ஆஷ் முகமதுவை கைது செய்தனர். 

அவரிடம் பாலியல் வன்கொடுமை குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

 

VIDEOS

Recommended