• முகப்பு
  • குற்றம்
  • பாஜக பிரமுகரை கத்தியால் குத்திய திமுக பிரமுகரின் மகன் ராஜா கைது

பாஜக பிரமுகரை கத்தியால் குத்திய திமுக பிரமுகரின் மகன் ராஜா கைது

மாரியப்பன்

UPDATED: Apr 13, 2024, 2:23:01 PM

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் டாக்டர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார்.

அவருக்கு ஆதரவு திரட்டி ஐஜேகே மற்றும் பாஜக, பாமக,அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் தீவிரமாக பிரச்சாரம் செய்துவருகின்றனர்.

அதன்படி பெரம்பலூர் அருகே லாடபுரத்தில் பாஜக பெரம்பலூர் தெற்கு ஒன்றியத்தலைவர் கந்தசாமி உள்ளிட்டோர் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திமுகவைச்சேர்ந்தவரின் மகன் ராஜா என்பவர் உள்ளிட்ட சிலர் பாஜக நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர் வாக்குவாதம் முற்றி கைகலப்பாகியுள்ளது. இதில் ராஜா திடீரென கத்தியை எடுத்து தாக்கியுள்ளார்.



இதில் கந்தசாமிக்கு வலது கையில் உள்காயமும், அவரது தம்பி லெட்சுமணனுக்கு வலது பக்க தலையில் ரத்த காயமும், நடுமுதுகில் ரத்த காயமும் ஏற்பட்டது.

காயம்பட்ட இருவரும் பெரம்பலூர் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதனிடையே போலீஸார் தகவல் தெரிந்தவுடன் அங்கு விரைந்துசென்று விசாரணை செய்து திமுக வைச்சேர்ந்த ராஜா என்பரை கைது செய்து மேலும் சிலரை தேடிவருகின்றனர்.

இச்சம்பவம் லாடபுரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

VIDEOS

Recommended