விவசாயி மீது தாக்குதல் வைக்கோல் போருக்கு தீ வைப்பு.

அஜித்குமார்

UPDATED: Jul 11, 2024, 6:10:52 AM

Latest Tamil Crime News 

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கருணாகரன்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கசேடன் (61), விவசாயி. இவரது, மனைவி பச்சையம்மாள், இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். 

இவர்களது குடும்பத்தினருக்கும், அதேபகுதியை சேர்ந்த வெங்கடேசனின் சித்திமகன்கள் 2 பேருக்கும் கடந்த சில ஆண்டுகளாக சொத்து பாகப்பிரிவினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது.

Latest Thiruvannamlai District News

மேலும் கடந்த சில தினங்களுக்குமுன்பு வெங்க டேசனின் நிலத்தை ஆக்கிர மித்து பயிர் வைப்பதற்காக அவரது சித்தி மகன்கள் டிராக்டரில் ஏர் உழுததாக கூறப்படுகிறது.

இதனால், வெங்கடே சன் அவர்களிடம் சென்று தட்டிகேட்டுள்ளார். அப் போது, அவர்கள் இருவரும் சேர்ந்து வெங்கடேசனை மிரட்டி அனுப்பியுள்ளனர். இதனால், வெங்கடேசன் நேற்றுமுன்தினம் அவரது நிலத்தில் பயிர் வைப்பதற்காகஏர் உழுதுள்ளார்.

இந்த தகவல் அறிந்து வந்த அவரது சித்தி மகன்கள் இருவரும் நேற்று வெங்கடேசன் நிலத்திற்கு சென்று, அங்கி ருந்த அவரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

News

மேலும் ஆத்திரமடைந்த இருவரும் சேர்ந்து வெங்க டேசனை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

பின்னர், அவர்கள் இருவரும் தனது ஆதரவாளர்கள் 10க்கும் மேற்பட்ட நபர்களை வரவழைத்து வெங்கடேசனின் நிலத்தில் உள்ள வைக்கோல் போரை தீ வைத்து கொளுத்தி, 

ஆழ் துளை மின்மோட்டார் களை திருடிக்கொண்டு தப்பியோடினர்.

District News & Updates in Tamil 

தகவலறிந்த ஆரணி தீயணைப்பு  துறையினர் தீயை அணைத்தனர். இதில், காயமடைந்த வெங்கடேசனை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் அனு மதித்தனர்.

இதுகுறித்து, ஆரணி தாலுகா போலீசில் வெங்கடேசனின் மகன் தினகரன் (31) நேற்று கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

VIDEOS

Recommended