• முகப்பு
  • குற்றம்
  • வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த உதவி காவல் ஆய்வாளரிடம் கத்தியை காண்பித்து மிரட்டிய சரித்திர பதிவேடு குற்றவாளி

வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த உதவி காவல் ஆய்வாளரிடம் கத்தியை காண்பித்து மிரட்டிய சரித்திர பதிவேடு குற்றவாளி

லட்சுமி காந்த்

UPDATED: Jul 28, 2024, 7:43:54 PM

காஞ்சிபுரம் மாவட்டம் 

எச்சூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் வயது 38. இவர் மீது சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் இவர் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளார்.

இந்நிலையில் இன்று மாலை சிறுமாங்காடு ஜங்ஷன் பகுதியில், சுங்குவார்சத்திரம் காவல் உதவி ஆய்வாளர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே பதிவெண் இல்லாத இரு சக்கர வாகனத்தில் சென்ற நபரை மடக்கி தடுத்து நிறுத்தினர்.

Latest Tamil Crime News

அந்த நபரை சோதனை செய்ய முயன்ற போது, அந்த நபர் திடீரென கத்தியை எடுத்து, உதவி ஆய்வாளரை மிரட்டி உள்ளார்.‌ உடனே அங்கிருந்த காவலர்கள் சுதாரித்துக் கொண்டு, கத்தியைக் காண்பித்து மிரட்டிய நபரை மடக்கிப்பிடித்து சுங்குவார்சத்திரம் காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

சரித்திர பதிவேடு குற்றவாளி

விசாரணையில், பிடிபட்ட நபர் எச்சூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பதும் இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் இவர் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளவர் என்பதும் தெரிய வந்தது. 

மேலும் சுரேஷ் மறைத்து வைத்திருந்த ஒரு கிலோ 250 கிராம் கஞ்சாவையும், கத்தியையும் பறிமுதல் செய்து சுரேஷை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

VIDEOS

Recommended