முட்புதரில் இறந்த நிலையில் வாலிபர் உடல் மீட்பு.

S.முருகன்

UPDATED: Sep 3, 2024, 12:50:01 PM

பூந்தமல்லி

சென்னீர்குப்பம் பகுதியில் உள்ள முட்புதர்கள் நிறைந்த காலி இடத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக வந்த தகவலையடுத்து பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் 

அங்கு சென்று பார்த்த போது ஜட்டி மற்றும் சட்டை அணிந்த நிலையில் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்

Latest Crime News

இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இறந்த கிடந்த நபர் யார் என்பது குறித்தும் கொலை செய்யப்பட்டாரா அல்லது குடிபோதையில் விழுந்து இறந்தாரா அல்லது வேறு எங்காவது கொலை செய்து உடலை இங்கு கொண்டு வந்து வீசினார்களா என்ற கோணத்தில் பூந்தமல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் 

முட்புதர்கள் நிறைந்த காலி இடத்தில் வாலிபர் உடல் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Breaking News

இந்த நிலையில் இறந்து போனது சென்னீர்குப்பத்தை சேர்ந்த கார்த்திகேயன்(32), என்பதும் டைல்ஸ் வேலை செய்து வந்த இவர் குடிபோதையில் வீட்டிற்க்கு செல்லாமல் இருந்து வந்ததும் குடிபோதையில் நாக்கு வறண்டு இறந்து போனாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதாக இந்த கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

VIDEOS

Recommended