• முகப்பு
  • குற்றம்
  • அரசு உயர்நிலைப்பள்ளி அருகே கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11 ஆயிரத்து 600 பாக்கெட் போதை பொருட்கள்.

அரசு உயர்நிலைப்பள்ளி அருகே கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11 ஆயிரத்து 600 பாக்கெட் போதை பொருட்கள்.

லட்சுமி காந்த்

UPDATED: Oct 4, 2024, 6:31:49 PM

காஞ்சிபுரம் மாவட்டம்

வாலாஜாபாத் காவல் எல்லைக்கு உட்பட்ட பல பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் அமோக விற்பனை என நாம் ஏற்கனவே நமது தொலைக்காட்சியில் செய்த வெளியீட்டு இருந்தோம்.

அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் அடுத்த கருக்குப்பட்டை பகுதியில் செல்வி ஸ்டோர் என்பவரின் கடையில் மறைத்து வைத்து விற்கப்பட்ட போதை பாக்குகள் மற்றும் போதை புகையிலை உள்ளிட்ட சுமார் 80 பவுச் பாக்கெட்கள் கைப்பற்றப்பட்டது. 

Latest Crime News Today In Tamil 

மேலும் கடையின் உரிமையாளர் செல்வி வயது 45 என்பவர் கைது செய்யப்பட்டார் . அவரிடம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் விசாரணை செய்யப்பட்டதில், அய்யம்பேட்டை பகுதியில் உள்ள அம்பிகா ஸ்டோர் என்ற ஹோல்சேல் வியாபாரியிடம் போதை பொருட்கள் வாங்கியதாக கூறினார்.

அதனைத் தொடர்ந்து டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையிலான மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவலர்கள் அம்பிகா ஸ்டோரின் உள்ளே நுழைந்து சோதனை செய்ததில் கடையின் உள்ளே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஹான்ஸ் ,ஸ்கூல் லீப், விமல் பாக் என மொத்தம் 11 ஆயிரத்து 600 பவுச் பாக்கெட்டுகள் கண்டெடுக்கப்பட்டது.

Breaking News In Tamil 

மாவட்டத்தின் பல இடங்களில் இவ்வளவு சோதனைகள் நடந்த போதிலும் , ஒரு கடையின் உள்ளே மூட்டை மூட்டையாக போதை வஸ்துகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதை காணும் போது ஸ்டாலின் ஆட்சியில்,போதை பொருட்களின் விற்பனை வெகு ஜோராக நடைபெறுவது அம்பலமானது.

அம்பிகா ஸ்டோரில் இருந்த 11 ஆயிரத்து 600 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, பழையசீவரம் பகுதியை சேர்ந்த கடையின் உரிமையாளர்களான சங்கர் ராஜ் வயது 40, அரவிந்தன் வயது 35 ஆகிய சகோதரர்களை கைது செய்து போதைப் பொருட்களை கைப்பற்றினார்.

கைது செய்யப்பட்ட மூன்று பேரும் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே போதை வஸ்துகளை விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது. 

இதைப் பற்றி ஒரு ஆசிரியர் கூறும்போது, அம்பிகா ஸ்டோரில் மட்டும் சுமார் 75 ஆயிரம் போதை பவுச் பாக்கெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது .எப்படி இருந்தாலும் சுமார் 50,000 பேர் இதை உபயோக படுத்துவார்கள்.

இவ்வளவு பேர்களை கெடுக்கின்ற இந்த கயவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் என ஆவேசமாக கூறினார்.

 

VIDEOS

Recommended