கூடலூர் அருகே 100 லிட்டர் கள்ளச்சாராயம் மூவர் கைது.

ராஜா

UPDATED: May 5, 2024, 7:59:13 PM

தேனி மாவட்டம் கூடலூர் அருகே கருநாக்கமுத்தன் பட்டியில் தனியார் தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக தொடர்ந்து புகார் வந்த நிலையில் 

கூடலூர் வடக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் வனிதாமணி அவர்கள் தலைமையில் போலீசார் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது கருநாக்க முத்தன் பட்டியில் தனியார் தோட்டத்தில் 100 லிட்டர் கள்ளசாராயம் ஊரலை கண்டுபிடித்தனர். உடனடியாக 100 லிட்டர் கள்ளச்சாராய உரலை பறிமுதல் செய்தனர்.

தனியார் தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக அதே பகுதியை சேர்ந்த சரவணன், ராஜேந்திரன், குமார் என்ற குமரேசன் ஆகிய 3 பேரை கூடலூர் வடக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் வனிதாமணி கைது செய்தார். 

மேலும் 100 லிட்டர் கள்ளச்சாராயம் குறித்து மூவரிடமும் கூடலூர் வடக்கு காவல் நிலையத்தில் விசாரனை நடத்தி வருகின்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரிய பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

 

  • 2

VIDEOS

Recommended