• முகப்பு
  • வானிலை
  • தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் சனிக்கிழமை (ஏப்ரல் 20) இன்று 109. 4 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது.

தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் சனிக்கிழமை (ஏப்ரல் 20) இன்று 109. 4 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது.

சாம் பென்னட்

UPDATED: Apr 20, 2024, 11:09:32 AM

கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே கடந்த பிப்ரவரி முதல் வாரத்திலேயே, தமிழ்நாட்டில் முதல் முறையாக ஈரோட்டில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது.

தொடர்ந்து, நாள்தோறும் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் குறையாமல் கடந்த 2 மாதங்களாக வெயில் தகித்து வருகிறது.

இதில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஈரோட்டில் அதிகபட்சமாக 107. 6 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் பதிவாகியிருந்தது.

இந்நிலையில், இன்று (ஏப்ரல் 20ம் தேதி) சனிக்கிழமை உச்சபட்ச வெயில் உக்கிரம் காட்டியது.

மாநிலத்திலேயே அதிகபட்சமாக, 109. 4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் அனலடித்ததால், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

இன்று கொளுத்திய வெயிலால் மக்கள் வெளியே நடமாட முடியவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடியது.

 

VIDEOS

Recommended