அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

வவுனியா

UPDATED: Apr 24, 2024, 4:57:38 PM

வவுனியா மாவட்டத்தில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று மதியம் 12.30 மணிக்கு வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போரட்டத்தில் ஈடுபட்டனர்.

original/img_20240424_125449
தமக்கான பிரயாணக் கொடுப்பனவை மற்றும் காகிதத்தை கொடுப்பணவுகளை வழங்குமாறு கோரி இக் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

இதன் பிரயாணக் கொடுப்பனவை 7500 ரூபாவாக பெற்றுத்தாருங்கள், 06.2024, 07.2024 சுற்று நிரூபத்திற்கமைவாக சம்மந்தப்பட்ட அனைத்து உத்தியோகத்தருக்கும் பெற்றுத்தாருங்கள் என்ற கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டதன் பின் கலைந்து சென்றனர்.

 

  • 2

VIDEOS

Recommended