• முகப்பு
  • இலங்கை
  • திங்கள் செவ்வாய் தினங்களில் கிராம அதிகாரிகளின் எவ்வித பணிகளும் இடம்பெறாது

திங்கள் செவ்வாய் தினங்களில் கிராம அதிகாரிகளின் எவ்வித பணிகளும் இடம்பெறாது

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Aug 11, 2024, 5:56:04 PM

ஐக்கிய கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் அழைப்பின் பேரில் நாளையும் நாளை மறுதினமும் (12/13) நாடு தழுவிய கிராம அதிகாரிகள் தங்களுடைய பணியில் இருந்து விலகி இருப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.

 தங்களது பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என்றும் தொடர்ந்து தங்களது வேண்டுகோள்கள் நிராகரிக்கப்பட்டு வந்ததாகவும் தொழிற்சங்கம் குற்றம் சாட்டி இருக்கிறது.

 இந்த வகையில் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நாளையும் நாளை மருதினமும் முழுமையாக தங்களுடைய பணிகளிலிருந்து விலகி இருப்பதாகவும் அது போன்று கிராம அதிகாரிகள் உடைய அலுவலகங்கள் இரண்டு தினங்களிலும் மூடப்பட்டிருக்கும் என்பதை மக்களுக்கு அறிவிப்பதாகவும் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளனர்.

 இதன் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு தங்களுடைய வருத்தத்தை தெரிவிப்பதாகவும் ஐக்கிய கிராம அதிகாரிகள் தொழிற்சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

VIDEOS

Recommended