எமது வாக்குகளை சிதரடிக்க பல அணிகள் களமிரக்கப்பட்டுள்ளன

முல்லை நிருபர்

UPDATED: Oct 21, 2024, 3:31:13 PM

வன்னி மாவட்டத்தில் 3 இலட்சத்து 26 ஆயிரம் வாக்குகள் உள்ளன. இதில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு என்கின்ற தேர்தல் தொகுதிகள் உள்ளட கப்பட்டுள்ளன.

மேற்கண்டவாறு வன்னி மாவட்டத்தில் வீணை சின்னத்தில் போட்டியிடும் வீ. அருநாதன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு தண்ணீர் முறிப்பில் இன்று இடம் பெற்ற தேர்தல் பிரசார கலந்துரையாடலின் போது கூறினார்.

original/img-20241019-wa0029_copy_512x384
மேலும் அங்கு கூறுகையில் -

45 அணிகள் இந்த தேர்தலில் வாக்குகளுக்காக போட்டியிடுகின்றன. இதில் 426 வேட்பாளர்கள் காணப்படுகின்றனர்.

எமது வாக்குகளை சித ரடித்து பாராளுமன்ற பிரதி நிதிதுவத்தை இல்லாமல் செய்யும் வேலைகள் இடம் பெறுகின்றது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

எமது மாவட்டத்தில் தான் அதிக பிரச்சினை இருக்கின்றது. நாம் இடம் பெயர்வினை சந்தித்து 15 வருடங்கள் ஆகின்றன. இன்னும் எமது பிரச்சினை தீர்க்கப் படவில்லை.

தலைவர் டக்ளஸ் அவர்கள் தமக்கு கிடைத்த அமைச்சை வைத்து பல பணிகளை செய்துள்ளார்.

அதை தொடர எமது மக்கள் எம்மை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன் என்று வீ. அருள் நாதன் கூரினார்.

மக்களின் தேவை அறிந்து செயற்படக்கூடிய தகுதியானவர் என தலைவர் டக்ளஸ்  தேவானந்தா அவர்கள் என்னை அடையாளம் கண்டது முல்லை மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.

 

VIDEOS

Recommended