• முகப்பு
  • இலங்கை
  • வடக்கு புகையிரதத்தின் நிலையங்களில் உள்ள அனைத்து பொறுப்புக்களிலிருந்தும் விலகுவதற்கு நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

வடக்கு புகையிரதத்தின் நிலையங்களில் உள்ள அனைத்து பொறுப்புக்களிலிருந்தும் விலகுவதற்கு நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இர்ஷாத் றஹ்மத்துல்லா

UPDATED: Oct 21, 2024, 5:33:05 AM

நவீனமயமாக்கப்பட்ட வடக்கு புகையிரதத்தின் மஹவ முதல் அநுராதபுரம் வரையான பகுதி இனறு  (22ஆம் திகதி) திறக்கப்படவுள்ள போதிலும், இடைப்பட்ட நிலையங்களில் உள்ள அனைத்து பொறுப்புக்களிலிருந்தும் விலகுவதற்கு நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

உயிருக்கு ஆபத்தான குறைபாடுகளுடன் 3000 கோடி ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட இந்த பாதையை ரயில்வே திணைக்களம் கையகப்படுத்தியுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன நேற்று ‘அருணவிடம் தெரிவித்தார்.

original/whatsapp-image-2024-10-18-at-13
இந்த வீதி நவீனமயப்படுத்தப்படுவதற்கு மேலதிகமாக சமிக்ஞை அமைப்பும் அகற்றப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பற்ற நான்கு புகையிரத கடவைகளில் கேட்கள் பொருத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

தலாவ, தம்புத்தேகம, கல்கமுவ மற்றும் அநுராதபுரம் புகையிரத நிலையங்களுக்கு அருகில் உள்ள கடவைகள் கையால் இயக்கப்படும் வாயில்களாக மாற்றப்படும் என அதிகாரிகள் உறுதியளித்த போதிலும் இதுவரை பாதுகாப்பு கதவுகள் பயன்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

original/whatsapp-image-2024-10-18-at-08

உரிய தரம் இன்றி மேற்கொள்ளப்படும் நவீனமயமாக்கல் பணிகளால் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்குப் பரிகாரமாக மஹவ முதல் அனுராதபுரம் வரையிலான பகுதியில் மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் புகையிரத சாரதிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

 

  • 1

VIDEOS

Recommended