• முகப்பு
  • இலங்கை
  • தனியார் வகுப்புக்குச் சென்ற இரு  மாணவிகளின் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்  

தனியார் வகுப்புக்குச் சென்ற இரு  மாணவிகளின் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்  

ராமு தனராஜா

UPDATED: Oct 21, 2024, 7:06:51 AM

தனியார் வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டுச் சென்ற 17 வயதுடைய இரு மாணவிகளில் ஒருவரின் சடலம், மஹியங்கனை லொக்கலோ ஓயாவில் இருந்து, இன்று காலை  கண்டுபிடிக்க பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த மாணவியுடன் சென்ற மற்றைய மாணவி தற்போது ரிதிமாலியத்த பொலிஸ் நிலையத்தில் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த இரண்டு மாணவிகளும் ஒரே பாடசாலையில் படிக்கும் நண்பிகள் என பொலிஸார் இன் ஆரம்பகட்ட விசாரணைகளில்  தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

 original/img-20241019-wa0029_copy_512x384
குறித்த வீதியில் ஞாயிற்றுக்கிழமை (20) இரவு பயணித்த மோட்டார் சைக்கிளை மாணவி ஒருவர் நிறுத்திய மாணவி தன்னை பாஸ் ஒன்றில் ஏற்றி விடுமாறு கூறியுள்ளார் இதன் போது குறித்த மாணவி மீது சந்தேகம் கொண்ட நபர் அந்த மாணவியை ஏற்றிக்கொண்ட மோட்டார் சைக்கிள் வந்த நபர் வீதியில் கடமையில் இருந்த போக்குவரத்து பொலிஸ்  அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை நகரில் உள்ள தனியார் வகுப்பிற்கு செல்வதாக கூறிவிட்டு, ஞாயிற்றுக்கிழமை (20) காலையிலேயே வீட்டில் இருந்து சென்ற இவர்கள் வீடு திரும்பாததால் பெற்றோர் பதுளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

VIDEOS

Recommended