• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • தீபாவளியை முன்னிட்டு தூய்மை பணியாளர்களை 2 மணி நேரமாக காக்க வைத்த திமுக எம் எல் ஏ தங்கபாண்டியன் பத்திரிகையாளர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் மிரட்டல்

தீபாவளியை முன்னிட்டு தூய்மை பணியாளர்களை 2 மணி நேரமாக காக்க வைத்த திமுக எம் எல் ஏ தங்கபாண்டியன் பத்திரிகையாளர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் மிரட்டல்

அந்தோணி ராஜ்

UPDATED: Oct 21, 2024, 9:01:33 AM

விருதுநகர் மாவட்டம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தீபாவளி திருநாளை முன்னிட்டு நகரப் பகுதியில் மற்றும் 36 ஊராட்சிகளில் துப்புரவு பணியாற்றும் பெண்கள் மற்றும் ஆண்கள் என 1,011 பேர் அனைத்து துப்புரவு பணியாளர்கள் மண்டபத்துக்குள் ஒரே இடத்தில் அமர வைத்தனர்.

பின்னர் இரண்டு மணி நேரம் கழித்து வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன். திமுக நகர மன்ற தலைவி பவித்ராஷியாம் கலந்து கொண்டு பணியாளர்களுக்கு சேலைகள், வேட்டி, சட்டைகளுடன் தீபாவளி பரிசு வழங்கிய போது தூய்மை பணியாளர்கள் மேடையை நோக்கி கூட்டம் கூட்டமாக முண்டியெடுத்துச் சென்றதால் தள்ளுமுள்ளு நடைபெற்றது.

திமுக

இதை படம் பிடிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது திமுக நிர்வாகி வீடியோ எடுக்காத என்று இந்த இடத்தை விட்டு வெளியே போ என்று ஒருமையில் தரக்குறைவாக ஒலிபெருக்கி மூலம் பேசி மிரட்டல் விடுத்தனர். 

இதனால் முறைப்படி தூய்மை பணியாளர்களை கட்டுப்படுத்த தவறிய திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் மற்றும் திமுக நிர்வாகிகள் அதை கண்டு கொள்ளவில்லை என தூய்மை பணியாளர்கள் குற்றம் சாட்டினர். இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பு காணப்பட்டது.

 

VIDEOS

Recommended