• முகப்பு
  • இலங்கை
  • ஆளுனர் ஏற்பாடு செய்த உத்தியோகபூர்வமற்ற கூட்டத்தில் அமைதியின்மையா?

ஆளுனர் ஏற்பாடு செய்த உத்தியோகபூர்வமற்ற கூட்டத்தில் அமைதியின்மையா?

ஏ. எம். கீத்

UPDATED: Aug 12, 2024, 12:49:51 PM

 நேற்றய தினம் 11.08.2024  ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் யாப்புக்கு முரணான திருக்கோணேஸ்வரம் ஆலய அபிவிருத்தி சம்பந்தமான பொது சபை உறுப்பினர்களுக்கான கூட்டம் ஒன்று அவசர அவசரமாக நடத்தப்பட்டது

அங்கு கருத்து தெரிவித்த செந்தில் தொண்டமான் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் ராஜ கோபுரம் கட்டுவதற்கான ஏற்பாடு தன்னால் செய்யப்படுள்ளதாக தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து சோழர் காலத்து பல நூறு கோடி ரூபாய் பெறுமதியான தாலி ஒன்று களவு போய் உள்ளது எனவும் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து கூட்டத்தை முடித்த போது மக்களுக்கு கேள்வி கேக்க வாய்ப்பு வழங்காமல் செல்ல முயன்றார்.

கூட்டத்துக்கு வருகை தந்த திருகோணமலை சேர்ந்த ஆயுள் கால உறுபினர்கள் தமது கேள்விக்கு நீங்கள் பதில் கூறியே ஆக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்த காரணத்தால் பின் வரும் கேள்விகள் விளக்கங்கள் மக்களால் கூறப்பட்டன.

01. கடந்த 2009 ம் ஆண்டு நீதி மன்றதால் நிர்வாக சபையிடம் கோவிலை ஒப்படைக்கும் போது இப்படியான சோழர் காலத்து நகை என்ற ஒன்று இருக்கவில்லை , 

கடந்த சிவராத்திரி நிகழ்வில் ஆலயத்துக்கு சொந்தமான அனைத்து அசையும் அசையா சொத்து விபரங்களும் பெரிய திரையில் மக்கள் பார்வைக்கு காண்பிக்கபட்டது , அதில் எங்குமே சோழர் காலத்து நகை என்ற ஒன்று எங்குமே இருக்கவில்லை , அவ்வாறு இருக்க இப்படி சோழர் காலத்து நகை திருட்டு என்று செய்தி வெளியிட பின்னணி என்ன ? 

02. ⁠திருகோணமலையில் தீர்க்கபட வேண்டிய கன்னியா , கோணேசர் ஆலய சட்ட விரோத கடைகள் என்று எவ்வளவோ பிரச்சனை இருக்கும் போது அதை பார்க்காமல் இந்த மூன்று பவுண் தாலி விடயத்தை தூக்கி பிடித்த யாப்புக்கு முரணான கூட்டத்தின் நோக்கம் என்ன ? 

03. குடியியல் நீதி மன்றில் ஆலயம் தொடர்பான ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும் போது எழுத்து மூலம் எந்த அறிவித்தலும் இல்லாமல் இப்படி ஒரு சட்டத்துக்கு முரணான அவசர கூட்டம் கூட்ட வேண்டிய தேவை என்ன ?

இவாறான மக்கள் கேள்விகளுக்கு பதில் கூற முடியாத செந்தில் தொண்டமான் வெளியே சென்று விட்டார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

VIDEOS

Recommended