• முகப்பு
  • இலங்கை
  • ஊவா ஆளுநர் அலுவலகத்தின் முன்னால் பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

ஊவா ஆளுநர் அலுவலகத்தின் முன்னால் பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

ராமு தனராஜா /எம்.கே. எம். நியார்

UPDATED: Apr 20, 2024, 8:27:11 AM

 ஊவா மாகாணத்திலுள்ள பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்கக் கோரி ஊவா மாகாணத்திலுள்ள பட்டதாரிகள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன் நடைபெற்றது.


பல நூறு பட்டதாரிகள் இவ் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடாத்தினர்.

அரசே பட்டதாரிகளுக்கு உடன் நியமனம் வழங்கு,அரச சேவைக்கு புத்தி ஜீவிகளை இணைத்துக் கொள்,18 வயதிற்கும் 45 வயதிற்குட்பட்ட பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கு போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன்,ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் ஆளுநர் அலுவலகத்தின் முன்னால் கூட்டம் ஒன்றும் நடைபெற்றது. 

அதனையடுத்து ஆளுநரை சந்தித்து இது சம்பந்தமான மகஜர் ஒன்றை வழங்க சென்றதுடன் அன்றைய தினம் ஆளுநர் இல்லாததன் காரணமாக அவரது தனிப்பட்ட செயலாளரை சந்தித்து மகஜரை அவரிடம் கையளித்தனர். அதனையடுத்து ஆளுநர் வந்ததுடன் இது சம்பந்தமாக அவருடன் கலந்துரையாட சந்தர்ப்பம் பெற்றுத்தருவதாக அவர் உறுதியளித்துடன் அனைவரும் கலைந்து சென்றனர்.

  • 1

VIDEOS

Recommended