• முகப்பு
  • புதுச்சேரி
  • விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு  100-ற்கும் மேற்பட்ட மன வளர்ச்சி குன்றிய வர்களுக்கு காலை உணவு.

விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு  100-ற்கும் மேற்பட்ட மன வளர்ச்சி குன்றிய வர்களுக்கு காலை உணவு.

சக்திவேல்

UPDATED: Aug 27, 2024, 9:00:20 AM

புதுச்சேரி

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு இந்திரா நகர் தொகுதி பொருளாளர் கலிய ஏழுமலை தலைமையில் அவரது ஏற்பாட்டில் பூத்துரை கிராமத்தில் உள்ள மனவளர்ச்சிக்குன்றிய சகோதர வாழ்வு மையத்தில் உள்ள சுமார் 100-ற்கும் மேற்பட்ட மன வளர்ச்சி குன்றியவர்கள் மற்றும் முதியவர்களுக்கு காலை உணவு உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

தேமுதிக விஜயகாந்த் பிறந்தநாள்

தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள பல்வேறு தொகுதிகளிலும் இவர்களது சார்பில் நலத்திட்ட உதவிகள் அன்னதானம் வழங்கப்பட்டது விழாவிற்கு திருபுவனை தொகுதி துணை செயலாளர் பிரபு என்கிற பிரபாகர் மற்றும் பாஸ்கர்,விஸ்வநாதன் உருளையன்பேட்டை தொகுதி ஜெரால்டு இந்திரா நகர் தொகுதி தமிழ்மணி ரமேஷ் மனவெலி தொகுதி பூமிநாதன்,கேப்டன் துரை, ஜெயக்குமார், மன்னாடிபட்டு தொகுதி தனஞ்செழியன் கார்த்திகேயன் உட்பட ஏராளமான தேமுதிக மாநில தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் 

இதில் சிறப்பு அழைப்பாளராக மணவெளி தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் திருநாவுக்கரசு உட்பட 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

இன்றைய புதுச்சேரி செய்திகள் 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக நிர்வாகிகள் கேப்டன் மறைந்தாலும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் அவரது பிறந்தநாளை எப்போதும் வறுமை ஒழிப்பு தினமாக தொடர்ந்து நாங்கள் கொண்டாடுவோம் அது மட்டும் இன்றி தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரி தமிழகத்தில் அதிக பெரும்பான்மையுடன் தேமுதிக ஆட்சி அமைக்கும் அண்ணியார் முதலமைச்சராவது உறுதி என தெரிவித்தனர்

 

VIDEOS

Recommended