திருச்சியில் திமுக பிரமுகர் அடித்து கொலை.

JK

UPDATED: Sep 15, 2024, 8:07:12 AM

திருச்சி 

கீழதேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் பிருத்விராஜ் (48). திருச்சி தெற்கு மாவட்ட திமுக பிரமுகராவார். கடந்த முறை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இவர் அப்பகுதியில் ஊர் நாட்டாமையாக செயல்பட்டு வந்துள்ளார். இவரது சகோதரர் ரமேஷ் என்பவருக்கும், பிருத்விராஜுக்கும். இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் நேற்று இரவு வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

திமுக பிரமுகர் அடித்து கொலை

பின்னர் பிருத்விராஜ் உள்ளிட்ட மூன்று பேர் அவரது வீட்டு மாடியில் உள்ள தனி அறையில் மது அருந்தி உள்ளனர்.

பிரித்விராஜ் மாடிக்கு சென்று நீண்ட நேரம் திரும்ப கீழே வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் மேலே சென்று பார்த்த போது அறையில் ரத்த வெள்ளத்தில் பிருத்விராஜ் உடற்பயிற்சி செய்ய பயன்படும் கர்லா கட்டை மூலம் 

மர்மமான முறையில் அடித்து கொலை செய்யப்பட்டுக் கிடந்ததை கண்டனர்.

Latest Trichy Crime News

இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்திற்கு குடும்பத்தினர் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், கொலை சம்பவ குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Breaking News In Tamil 

பிருத்விராஜ்க்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவருக்கு குடும்பத்திற்குள்ளேயே பிரச்சனை இருந்ததாகவும், அதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

அதன் அடிப்படையில் தற்போது காவல்துறைய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

VIDEOS

Recommended