நாச்சியார் கோவிலில் 8 சவரன் தங்க நகைகள் 50,000 ரொக்கம் திருட்டு.

ரமேஷ்

UPDATED: Sep 15, 2024, 8:54:54 AM

கும்பகோணம்

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா நாச்சியார் கோவிலில் வசந்த் நகரில் மளிகை கடை நடத்தி வரும் பாஸ்கர் ஜான்சி ராணி, தம்பதியினர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு தனது மகனுக்கு உடல் நலம் சரியில்லை என்று கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனை சிகிச்சைக்காக சென்றிருந்தனர்.

இரவு கணவருடன் வீடு திரும்பிய போது வீட்டை திறந்து பார்த்த போது வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.

அதிர்ச்சி அடைந்த பாஸ்கர் மற்றும் ஜான்சிராணி, பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 50,000 8 சவரன் தங்க நகை உண்டியல் ஆகியவை திருட்டு போய் இருப்பது தெரியவந்தது,

Breaking News In Tamil 

தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாச்சியார் கோவில் காவல்துறையினர் தடயங்களை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

வீட்டின் பூட்டை உடைக்காமல் கதவு மேல் ஏறி உள்ளே சென்று கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது.

 

VIDEOS

Recommended