• முகப்பு
  • அரசியல்
  • திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் கலைஞருக்கு சிலை - காணொளி மூலம் தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.

திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் கலைஞருக்கு சிலை - காணொளி மூலம் தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.

JK

UPDATED: Aug 7, 2024, 7:35:07 AM

திருச்சி தெற்கு மாவட்டம் 

தி.மு.க சார்பில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் காட்டூர் ஆயில்மில் செக்போஸ்ட், அருகில் கலைஞரின் நூற்றாண்டு நினைவு நாளையொட்டி சிலை திறப்பு விழா பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமையில் நடைபெற்றது.

கலைஞரின் நூற்றாண்டு நினைவு நாள்

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி சிலையை காணொளி மூலம் தமிழ்நாடு முதலமைச்சரும், கழக தலைவருமான மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மு.க.ஸ்டாலின்

இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது, மாநகராட்சி துணை மேயர் திவ்யா, பகுதி கழகச் செயலாளர் நீலமேகம் உட்பட நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended