அதிக குடி பல லட்சத்தை பறி கொடுத்தது

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Mar 8, 2024, 12:54:21 AM

கொழும்பு, உள்ள ஐந்து நட்சத்திர  ஹோட்டல் ஒன்றில் சொகுசு அறையை முன்பதிவு செய்து மது அருந்திய வர்த்தகர் ஒருவரிடம் தனது நண்பரே ஐம்பது இலட்சம் ரூபாவை திருடிய சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Also Read : போலீசார் பொய் வழக்கு போடுவதை நிறுத்துமாறு வலியுறுத்தி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்ரிடம் கணவன் மனைவி முறைப்பாடு

 கஹவ பிரதேசத்தில் வசிக்கும் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் செய்த முறைப்பாட்டில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழிலதிபர் கொள்ளுப்பிட்டியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு நண்பருடன் வந்து அங்கு அறை ஒன்றை பதிவு செய்துள்ளார்.

Also Read : புத்தளம் கருவெளகஸ்வேவ தேவ நுவேரவில் காட்டு யானைகள் துவம்சம்

பின்னர் இருவரும் மது அருந்திவிட்டு, அளவுக்கு அதிகமாக குடித்த தொழிலதிபர் தூங்கிவிட்டார். அதன் பின் நண்பன் தொழிலதிபரின் பையில் இருந்த ஐம்பது லட்ச ரூபாயை திருடிக்கொண்டு ஓடிவிட்டான்.

இந்த திருட்டைச் செய்ததாகக் கூறப்படும் நபரைக் கைது செய்ய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

Also Read : தென் கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் போராட்டம் கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் ஆய்வரங்கு ஒத்திவைப்பு 

VIDEOS

RELATED NEWS

Recommended