• முகப்பு
  • புதுச்சேரி
  • புதுச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட மாணவி ஆர்த்தியின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு.

புதுச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட மாணவி ஆர்த்தியின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு.

சக்திவேல்

UPDATED: Mar 6, 2024, 11:45:29 AM

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த மாணவி ஆர்த்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து புதுச்சேரி மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கொலை செய்யப்பட்ட மாணவியன் பெற்றோர்கள் முதலமைச்சர் ரங்கசாமியை சட்டசபையில் சந்தித்து முறையிட்டனர்.

Also Read : புதுச்சேரி மாணவி ஆர்த்தி கொலைக்கு நியாயம் கேட்டு பெண்கள் சட்டமன்றத்தை முற்றுகை.

அப்போது அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து முதலமைச்சர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது...

கொலை செய்யப்பட்டு உயிரிழந்த மாணவி ஆர்த்தியின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

Also Read : திமுக கிளை செயலாளருமான தயாளன் என்பவரின் காதை கடித்து தனியாக எடுத்த தந்தை மகன்.

மேலும் இந்த நிகழ்ச்சியின் போது உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உடன் இருந்தார்.

அவர் கூறும் போது குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Also Watch : 50 ஆயிரம் நன்கொடை கேட்டு தொல்லை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி கும்பல்,

VIDEOS

RELATED NEWS

Recommended