• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • அட்டைப்பொட்டி தயாரிக்கும் தனியார் தொழிற்சாலைக்குள் இளைஞர் உள்ளே புகுந்து கொதிகலனில் விழுந்து தற்கொலை.

அட்டைப்பொட்டி தயாரிக்கும் தனியார் தொழிற்சாலைக்குள் இளைஞர் உள்ளே புகுந்து கொதிகலனில் விழுந்து தற்கொலை.

சுரேஷ்பாபு

UPDATED: Aug 28, 2024, 8:42:25 AM

திருவள்ளூர்

அடுத்த வலசை வெட்டிக்காடு  பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மகன் சீனிவாசன் -26 இவர் திருவள்ளூர் அடுத்த போளிவாக்கத்தில் உள்ள தனியார் அட்டைப்பெட்டி மற்றும் தெர்மாகோல் தயாரிக்கும் தொழிற்சாலைக்குள் செக்யூரிட்டி பாதுகாப்பு மீறி கம்பெனி உள்ளே புகுந்து கொதிகலனில் விழுந்து தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார்.

இதில் உடல் முழுவதும் வெந்த நிலையில் மீட்க்கப்பட்டு பூந்தமல்லி அடுத்த தண்டலம் சவீதா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அவர் அங்கு 95 சதவீத காயத்துடன் ஆபத்தான முறையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் குறித்து மணவள நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவத்தை கேள்விப்பட்ட சீனிவாசன் உறவினர்கள் தொழிற்சாலை முன்பாக கூடி முற்றுகையிட்டனர்.

செக்யூரிட்டி பாதுகாப்பு மீறி இளைஞர் உள்ளே புகுந்து கொதிகலனில் குதித்து தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

 

VIDEOS

Recommended