5 அடி உயரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி பலி.

சுந்தர்

UPDATED: Jul 22, 2024, 6:23:07 PM

சென்னை வானகரம் மேட்டுக்குப்பம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள கோவிந்தாபுரம் கரவான்படி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீ ராமலு. 

இவர் சென்னை வானகரம் மேட்டுக்குப்பம் பிரதான சாலையில் உள்ள சாமுண்டீஸ்வரன் என்பவருக்கு சொந்தமான அட்டை தயாரிக்கும் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.

கடந்த மூன்று நாட்களாக சித்தப்பா கமல் என்பவர் உடன் இணைந்து பணியாற்றி வந்த நிலையில், இன்று மெட்டல் ஷீட் போடும் பணியை செய்து வந்தார்.

Latest District News in Tamil 

அப்போது 5 அடி உயரத்திலிருந்து எதிர்பாராத விதமாக அவர் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் படுகாயம் அடைந்த ஸ்ரீராமலுவை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனை கொண்டு செல்ல முயன்றனர்.

ஆனால் ஸ்ரீராமனுவை சோதித்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை

இதைத் தொடர்ந்து மதுரவாயல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஸ்ரீ ராமலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

VIDEOS

Recommended