• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை குன்றத்தூர் அருகே அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து.

வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை குன்றத்தூர் அருகே அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து.

S.முருகன்

UPDATED: Jun 20, 2024, 7:42:13 PM

வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தது 

சாலையின் குறுக்கே திடீரென ஒரு மாடு கடந்த நிலையில் வேகமாக வந்த கார் மாட்டின் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்த நிலையில் அதனை தொடர்ந்து வந்த கார்கள் அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்றாக மோதியது

இதில் நான்கு கார்கள், ஒரு லோடு வேன் என ஐந்து வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்றாக மோதி நொறுங்கியது இதில் வாகனத்தில் பயணம் செய்தவர்கள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

மேலும் லோடு வேனை ஓட்டி வந்த டிரைவர் அப்படியே இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியதால் அவரை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது இதையடுத்து அங்கு வந்த போக்குவரத்து போலீசார் அந்த வழியாக வாகனங்கள் எதுவும் சொல்லாத வகையில் தடுப்புகள் அமைத்தனர்.

இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து லோடு வேனில் சிக்கிய டிரைவரை கடும் சிரமத்திற்கு மத்தியில் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் கார் மற்றும் லோடு வேனில் வந்த இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் கிரேன் மற்றும் ஜேசிபி எந்திரம் மூலம் சாலையில் விபத்தில் சிக்கிய வாகனங்கள் ஒவ்வொன்றாக அப்புறப்படுத்தப்பட்டது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டதால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கடுமையான இந்த விபத்தில் அதிஷ்ட்ட வசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை இந்த சம்பவம் குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended