• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • மூணாறில் சண்டையிட்டுக் கொண்ட இரு காட்டு யானைகள் படுகாயம் அடைந்த முறிவாளன் காட்டு யானை உயிரிழப்பு

மூணாறில் சண்டையிட்டுக் கொண்ட இரு காட்டு யானைகள் படுகாயம் அடைந்த முறிவாளன் காட்டு யானை உயிரிழப்பு

ராஜா

UPDATED: Sep 1, 2024, 1:37:49 PM

கேரள மாநிலம் 

இடுக்கி மாவட்டத்தில் உள்ள சின்னக்கானல் பகுதியில் உலா வரும் காட்டு யானைகளான முறிவாளன் மற்றும் சக்கக்கொம்பன் காட்டு யானைகள் இரண்டும் நேற்று இரவு சண்டை போட்டுக்கொண்டது. 

இதில் இரு யானைகளும் ஒன்றோடு ஒன்று தாக்கிக் கொண்டன. இதில் முறிவாளனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 

இன்று காலை காயங்களுடன் சுற்றி வந்த முறிவாளன் யானை உடல்நிலை சோர்ந்து வனப்பகுதியில் சரிந்தது.

காட்டு யானைகள்

இதனை தொடர்ந்து கண்காணித்து வந்த வனத்துறையினர் உடனடியாக விரைந்து சென்று கால்நடை மருத்துவர் உதவியுடன் யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது

இருப்பினும் காயம் அடைந்த யானைக்கு முதுகு தண்டு அருகில் ஏற்பட்ட ஆழமான காயத்தால் சிகிச்சை பலன்கள் உயிரிழந்தது.

Breaking News

உயிரிழந்த முறிவாளன் யானைக்கு உடலில் 15 இடங்களில் தந்ததால் குத்திய காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் கடந்த 21ஆம் தேதி 2 யானைகளுக்கும் நடைபெற்ற மோதலில் முறிவாளன் மற்றும் சக்ககொம்பன் காட்டு யானைக்கும் முன்பே காயம் ஏற்பட்டு நடப்பதில் சிரமம் ஏற்பட்டு வந்திருந்ததாகவும் தற்போது நடந்த மோதலில் மேலும் சிரமப்பட்டு இருந்த நிலையில் உயிரிழந்துள்ளது.

 

VIDEOS

Recommended