• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • தடா நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்ற போது இருசக்கர வாகனம் முன்னால் சென்ற லாரி மீது மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு.

தடா நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்ற போது இருசக்கர வாகனம் முன்னால் சென்ற லாரி மீது மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு.

L.குமார்

UPDATED: Oct 5, 2024, 10:24:13 AM

பொன்னேரி

வார இறுதி நாளான இன்று சென்னையில் பணியாற்றும் நண்பர்கள் குழுவாக 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் ஆந்திர மாநிலம் தடா நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா புறப்பட்டனர்.

சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பொன்னேரி அடுத்த புதுவாயல் பகுதியில் இருசக்கர வாகனம் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் பிடித்ததால் அதன் பின்னால் பயங்கரமாக மோதியது.

இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஆடிட்டிங் அலுவலகத்தில் பணியாற்றி வந்த கன்னியாகுமரியை சேர்ந்த இளம்பெண் ஆனிமோல் (21), திருவண்ணாமலையை சேர்ந்த இளைஞர் சந்தோஷ் (21) என இருவரும் தலையில் பலத்த காயமடைந்தனர்.

விபத்து

இதுகுறித்து அளிக்கப்பட தகவலின் பேரில் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு இருவரையும் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஆனிமோல் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

தலையில் பலத்த காயமடைந்த சந்தோஷ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தடா நீர்வீழ்ச்சி

இதனையடுத்து விபத்தில் உயிரிழந்த இருவரது சடலங்களை பொன்னேரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக சைவ கிடங்கில் வைத்தனர். 

தொடர்ந்து கவரைப்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்ற பொது ஏற்பட்ட விபத்தில் நண்பர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சக நண்பர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

 

VIDEOS

Recommended