காரில் புகையிலை பொருட்கள் கடத்தல்.

பாலமுருகன்

UPDATED: Jul 31, 2024, 7:29:25 PM

தூத்துக்குடி மாவட்டம்

காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜசுந்தர் மேற்பார்வையில் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் வனசுந்தர் மற்றும் சார்பு ஆய்வாளர் ஞானராஜன் மற்றும் போலீசார் நேற்று சிறுபாடு ஜங்ஷன் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

Latest Tamilnadu News Tamil

அதில் புதுக்கோட்டை குலையன்கரிசல் பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டி மகன் மாரிராமர் (36) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக காரில் கடத்தி வந்தது தெரியவந்தது. 

உடனே போலீசார் மாரி ராமரை கைது செய்து, அவரிடமிருந்த ரூ.1,50,000 மதிப்புள்ள 187 கிலோ புகையிலை பொருட்கள், ரொக்க பணம் ரூபாய் 25,500 மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

Tuticorin Latest News

இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

VIDEOS

Recommended