தூத்துக்குடி மாநகராட்சி 53வது வார்டு கவுன்சிலர் திமுக கட்சியில் இருந்து நீக்கம்

பாலமுருகன்

UPDATED: Jul 30, 2024, 6:58:45 PM

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி 53வது வார்டு கவுன்சிலர் திமுக கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிவிப்பில், தூத்துக்குடி மாநகர விவசாயத் தொழிலாளர் அணி அமைப்பாளர் எஸ்.வி.எஸ் முத்துவேல் கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திமுக

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எஸ்விஎஸ் முத்துவேல் தூத்துக்குடி மாநகராட்சியில் 53வது வார்டு கவுன்சிலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



VIDEOS

Recommended