• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • டவுன் பஸ் நம்பர் 1- எ- காலை 8.மணிக்கு வர தாமதம் ஆவதால் பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் அவதி

டவுன் பஸ் நம்பர் 1- எ- காலை 8.மணிக்கு வர தாமதம் ஆவதால் பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் அவதி

கார்மேகம்

UPDATED: Jul 22, 2024, 7:06:16 PM

இராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி யூனியன் உட்பட்ட ஆணைகுடி மோர்க்குளம் முஸ்லீம் மோர்க்குளம் தில்லையேந்தல் பாலையேந்தல் ஆகிய கிராமங்களுக்கு 1- எ- டவுன் பஸ் இயக்கப்படுகிறது

மேற்கண்ட இக் கிராமத்திற்கு ஒரே பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது இந்த பஸ் காலை 8.00 மணிக்கு வரவேண்டிய‌ பஸ் தாமதமாக 9.30- க்கு‌ வருவதால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் குறிப்பிட்ட  நேரத்தில் பள்ளி செல்ல முடியாமல் 10 கீ.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டிய அவலம் நீடிக்கின்றது.

எனவே மாணவ மாணவிகளின் கல்வி நலன் கருதி குறிப்பிட்ட காலை 8.00 மணிக்கு வந்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு மேற்கண்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் எங்கள் கிராமத்திற்கு ஒரே ஒரு பஸ் மட்டுமே வந்து செல்கிறது அதுவும் சரியான நேரத்தில் வருவதில்லை கூடுதல் பஸ் விட வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம் என்று கூறினார்கள்.

இக்கிராமத்திற்கு கூடுதல் பஸ்கள் இயக்க  மாவட்ட நிர்வாகம் , போக்குவரத்து கழகம்  நடவடிக்கை எடுக்குமா ? 

 

VIDEOS

Recommended