நாளை மதுக்கடைகள் விடுமுறை 21.4.2023

சாம் பென்னட்

UPDATED: Apr 20, 2024, 11:17:57 AM

ஈரோடு மாவட்டத்தில் நாளை (21ம் தேதி) மகாவீர் ஜெயந்தி மற்றும் மே 1ம் தேதி மே தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு "மது விற்பனை இல்லாத நாளாக" அனுசரிக்க வேண்டும் அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை ஏப்ரல் 21ம் தேதி மற்றும் மே 1ம் தேதி ஆகிய தினங்கள் முழுவதும் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடைகள் அதனுடன் இயங்கும் பார்கள், எப்எல்2 கிளப்கள் மற்றும் எப்எல்3 ஹோட்டல்களில் உள்ள பார்கள் ஆகியவை மூடப்பட்டிருக்கும்.

அன்றைய தினங்களில் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது. மேலும் , அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

  • 3

VIDEOS

Recommended