நடைபாதை நடப்பதற்கே! நடைபாதையை மீட்டுத் தாருங்கள் போக்குவரத்து காவல்துறைக்கு கோரிக்கை.

முகேஷ்

UPDATED: Jun 16, 2024, 6:57:39 PM

குமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் மற்றும் நீதிமன்ற சாலை ஆரியபவன் ஹோட்டல் முன்பு உள்ள நடைபாதை மற்றும் சாலை முழுவதும்  ஆக்கிரமித்து நான்கு சக்கர வாகனம் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி உள்ளதால் சாலையின் நடுவில் பாதசாரிகள் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

பாதசாரிகள் நடந்து செல்வதற்காக போடப்பட்டுள்ள நடைபாதையை முழுவதுமாக ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துவதால் சாலையில் இறங்கி பொதுமக்கள் நடந்து செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர். போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

 

VIDEOS

Recommended