ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் விஷம்ருதி தற்கொலை.

ராஜா

UPDATED: May 16, 2024, 2:06:20 PM

கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த புதும்பில் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜார்ஜ் அவரது மனைவி மெர்சி, மகன் அகில் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இவர்கள் அதே பகுதியில் ஜவுளி வியாபாரம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு இவர்கள் கம்பம் நகரில் இருந்து கேரள மாநிலம் கம்பம் மெட்டு செல்லும் வழியில் தனியாருக்கு சொந்தமான காட்டுப் பகுதியில் விவசாயத்துக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை மதுபானத்தில் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று முதல் கட்டமாக போலீசார் விசாரணையில் தெரிய வருகிறது.

கம்பம் வடக்கு காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி தேனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

மேலும் இவர் ஜவுளி வியாபாரத்தில் கடன் ஏற்பட்டதால் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா என காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

 

VIDEOS

Recommended